காஸாவில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், எகிப்தின் ரஃபா நுழைவாயில் ஊடாக வெளியேறிய 11 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை குறித்த அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்திருந்தது.

அவர்கள் அனைவரும் ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்துக்கு வந்து எகிப்தில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

17 இலங்கையர்கள் காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பின்மை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...