சிறார்களை ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல்: விசாரணை ஆரம்பம்!

Date:

இலங்கை சிறார்களை மலேசியா வழியாக வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் முதலில் சட்ட ரீதியாக மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, போலி கடவூச்சீட்டு தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 13 சிறார்கள் இதுவரை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...