சிறார்களை ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல்: விசாரணை ஆரம்பம்!

Date:

இலங்கை சிறார்களை மலேசியா வழியாக வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் முதலில் சட்ட ரீதியாக மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, போலி கடவூச்சீட்டு தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 13 சிறார்கள் இதுவரை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....