சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் 22,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Date:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 22,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 5,949 குடும்பங்களைச் சேர்ந்த 22,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக வெள்ளத்தினால் 11,124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டம் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய சமீபத்திய அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சுமார் 1,743 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...