நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

Date:

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் 4 பந்துகளில் 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் வெற்றி இலக்கை 23 ஓவர்கள் 2 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து கடந்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர், இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து அணியை மாத்திரம் பின்தள்ளி 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கை அணி 9 போட்டிகளில் களமிறங்கி இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...