ராஃபா எல்லை ஊடாக வெளியேற 17 இலங்கையர்களுக்கு அனுமதி!

Date:

காஸாவிலிருந்து எகிப்திற்கு செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூதுவராலயத்தின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்திற்கு வெளியேறவுள்ளனர்.

காயமடைந்த பலஸ்தீனர்களின் முதல் குழுவினர் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் சென்றுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...