அல்-ஹாஜ் கலாநிதி ஹஸன் மௌலானா ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமனம்!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச சமாதான மாநாடு 2023 கடந்த 03ம் திகதி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபககார்த்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதான தூதுவர், பேராசிரியர். டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கெளரவ கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...