அல்-ஹாஜ் கலாநிதி ஹஸன் மௌலானா ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமனம்!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச சமாதான மாநாடு 2023 கடந்த 03ம் திகதி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபககார்த்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதான தூதுவர், பேராசிரியர். டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கெளரவ கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...