இஸ்ரேலிலுள்ள தனது தூதுவரை வெளியேற்றியது ஜோர்டான்!

Date:

காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி வரும் ஜோர்டான், இஸ்ரேலிலுள்ள தனது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரை நிறுத்தி “அது ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடியை” முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தூதுவர் டெல் அவிவ் திரும்புவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியேறிய ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதுவர் அதே நிபந்தனைகளின் பேரில் மட்டுமே திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா மீதான தாக்குதல்களால் பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் காசா மீதான அளவில்லாத தாக்குதலாலும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...