கடந்த 2 மாதங்களில் 299 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

Date:

கடந்த இரு மாதங்களில் சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

131 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சிறுமிகள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கருத்து வெளியிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பாரதூரமான பிரச்சினையை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...