கடந்த 2 மாதங்களில் 299 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

Date:

கடந்த இரு மாதங்களில் சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

131 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சிறுமிகள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கருத்து வெளியிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பாரதூரமான பிரச்சினையை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...