கட்டணம் செலுத்தாமையால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என அண்மையில் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...