கட்டணம் செலுத்தாமையால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என அண்மையில் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...