சிறைச்சாலையில் 23 சிசிரிவி கமராக்களை உடைத்த கைதி: விசாரணைகள் ஆரம்பம்!

Date:

பூஸ்ஸ சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த 23 சிசிரிவி கமராக்கள் கைதி ஒருவரால் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளார்.

அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உடற்பயிற்சிக்காக வெளியே அழைத்துச் செல்ல கதவுகள் திறக்கப்பட்ட போது சிறைச்சாலையின் சுவரில் ஏறியுள்ளார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த 23 பாதுகாப்பு கமராக்களை அவர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு, கைதியின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் சிறைச்சாலை அத்தியட்சகரின் விசாரணையின் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் சிறை கண்காணிப்பாளர் ஒருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த கைதியை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே இதற்கு பிரதான காரணமாகும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு பேருக்கு பணி இடைநிறுத்தக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...