நாடளாவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

இதற்கமைய 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (02) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3 ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆம் திகதியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 8 ஆம் திகதியும், தென் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 9 ஆம் திகதியும் குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி மேல் மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...