நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

Date:

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் 4 பந்துகளில் 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் வெற்றி இலக்கை 23 ஓவர்கள் 2 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து கடந்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர், இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து அணியை மாத்திரம் பின்தள்ளி 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கை அணி 9 போட்டிகளில் களமிறங்கி இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...