நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

Date:

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் 4 பந்துகளில் 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் வெற்றி இலக்கை 23 ஓவர்கள் 2 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து கடந்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர், இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து அணியை மாத்திரம் பின்தள்ளி 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கை அணி 9 போட்டிகளில் களமிறங்கி இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...