நில அதிர்வுகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Date:

நில அதிர்வுகள் மூலம் சமூக மட்ட அமைப்புகள் மத்தியில் முன்னெடுக்கப்படக் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவலை பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, மற்றும் திருகோணமலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின் போது, “ஒரு வருட கால எல்லைக்குள் இருமுறை ஏற்பட்டுள்ள குறித்த நில அதிர்வு தொடர்பாக கலந்துரையாட குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிலிருந்து பொதுமக்களை காத்துக்கொள்ளவும் உயிராபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஊடாக அங்குள்ள சமூக மட்ட அமைப்புகள் மத்தியில் முன்னெடுக்கப்படக்கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.” என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...