பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சு பணிப்புரை

Date:

பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாடசாலைகளில் உள்ள ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...