பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சு பணிப்புரை

Date:

பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாடசாலைகளில் உள்ள ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...