பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சு பணிப்புரை

Date:

பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாடசாலைகளில் உள்ள ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...