பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில்,மாணவி ஒருவர் உயிரிழப்பு: பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

Date:

வெல்லம்பிட்டி – வேரகொட கனிஷ்ட பாடசாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாடசாலையின் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி பயின்றுவந்த மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...