பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

Date:

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை எதிர்பார்ப்பதாக அரச மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

20,000 ரூபாவை வழங்குமாறு கோரி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பாராளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு உள்ளடக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைவருக்கும் கொடுப்பனவு கிடைக்கும் வரை பாரிய தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...