பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும்: பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில்

Date:

உத்தேச பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் நடைமுறைக்கு வந்தப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலம் தொடர்பான விளக்கத்தை பிரதமர் தினேஸ் குணவர்தன கட்சித் தலைவர்களுக்கு வழங்க உள்ளார். அதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டமொன்றும் நடத்தப்படும்.

கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடலின் பின் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு முடியாத வகையில் சோல்பரி யாப்பில் உருவாக்கப்பட்ட விதிகள்தான் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.

இந்தச் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.“ என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...