இலங்கை அணியின் ஆதரவாளர் என கருதப்படம் பெர்சி அபேசேகரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடுகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளராக அறியப்பட்ட பெர்சி அபேசேகர கடந்த 30ஆம் திகதி தமது 87ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.
பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி இருந்ததுடன், அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே காலமானார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 5 மில்லியன் ரூபாவை பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வழங்கியிருந்தது.
பெர்சி அபேசேகர 1979 உலகக் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சர்வதேச போட்டிகளில் இலங்கைக் கொடியை உயர்த்தியவராவார்.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கிலேயே இலங்கை அணி வீரரர்கள் இன்று கையில் கறுப்புப் பட்டியை அணிந்தவாறு விளையாடி வருகின்றனர்.