மின் இணைப்பை விரிவுபடுத்த பாரிய திட்டங்கள் ஆரம்பம்!

Date:

தேசிய மின் கட்டத்திற்கு 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் வகையில் 06 பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்தத் திட்டங்களின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் நில அனுமதியின் ஒப்புதலுக்கு உட்பட்டு, மாத இறுதிக்குள் அவற்றைத் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மதிப்பீடு செய்தல், ஒப்புதல் செயல்முறை மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்மூலம் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் பிற அனுமதிகளுக்கு உட்பட்டு அந்தத் திட்டங்களுக்கு மின்சாரம் இணைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் எக்ஸ் சமூக ஊடகங்க செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்மொழியப்பட்ட 6 திட்டங்களின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 1110 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மற்றும் சூரிய சக்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...