யுத்தத்தினால் இஸ்ரேலில் விவசாயம் பாதிப்பு: இலங்கையிலிருந்து 10,000 பேரை உடனடியாக இஸ்ரேலுக்கு அனுப்ப அரசாங்கம் இணக்கம்

Date:

இலங்கையில் இருந்து உடனடியாக 10,000 தொழிலாளர்களை விவசாயத் துறைக்கு உள்ளீர்ப்பதற்கான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்தாகியுள்ளது.

இஸ்ரேலிலுள்ள இலங்கைக்கான தூதுவர் நிமல் பண்டாரநாயக்க மற்றும் இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோசே ஆபல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கென 5000 வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை இஸ்ரேலியக் கம்பனிகளுக்கு கடந்த வாரம் அனுமதியளித்திருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் 10,000 பேரை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்வந்துள்ளது.

நடந்து கொண்டிருக்கும் போரினால் இஸ்ரேலின் விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய ஊடகம், விவசாயத்துறையில் வேலை செய்த 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 8000 பேர் வரை இதுவரை இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல விவசாயத்துறையில் பணிபுரிந்த 20,000 பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் வகையில் 10,000 தொழிலாளர்களை அடுத்த வாரமளவில் அனுப்பி வைப்பதற்கு இலங்கை இணங்கியுள்ளது.

இஸ்ரேலில் ஏற்கனவே 4500 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பராமரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Globes

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...