ராஃபா எல்லை ஊடாக வெளியேற 17 இலங்கையர்களுக்கு அனுமதி!

Date:

காஸாவிலிருந்து எகிப்திற்கு செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூதுவராலயத்தின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்திற்கு வெளியேறவுள்ளனர்.

காயமடைந்த பலஸ்தீனர்களின் முதல் குழுவினர் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் சென்றுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...