ராஃபா எல்லை ஊடாக வெளியேற 17 இலங்கையர்களுக்கு அனுமதி!

Date:

காஸாவிலிருந்து எகிப்திற்கு செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூதுவராலயத்தின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்திற்கு வெளியேறவுள்ளனர்.

காயமடைந்த பலஸ்தீனர்களின் முதல் குழுவினர் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் சென்றுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...