வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் – தாயும் மகனும் 5 கோடி ரூபா பணத்துடன் கைது!

Date:

போலியான அடையாள அட்டை மற்றும் முகவரியை வழங்கி வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் 5 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக பெற்றுக்கொண்ட 5 கோடியே 11இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா பணம் மற்றும் தங்க வளையலுடன் சந்தேகநபரும், அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

34 மற்றும் 67 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரும் அலுபோமுல்ல பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பண்டாரகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களைப் வங்கிக் கணக்குகள் ஊடாக மேற்கொண்டமை குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் விபரங்களை விசாரித்தபோது போலி அடையாள அட்டை மற்றும் போலி முகவரி மூலம் கணக்குகள் தொடங்கப்பட்டது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...