*Budget 2024: வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல,எதிர்காலத்துக்கான திட்டம்-ஜனாதிபதி உரை!

Date:

மிகவும் நெருக்கடியான நாட்டையே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடு பொருளாதார ரீதியாக அனைத்து மட்டத்திலும் தோல்விகண்டிருந்தது. தற்போது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களை முன்வைத்தார்.

  • பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 10ஆயிரம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
  • ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ரூபாய்வரை அதிகரிக்கப்படும்.
  • பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அரச ஊழியர்களின் சம்பவத்தை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், வரியை அதிகரிக்க வேண்டும்.
  • அரச வரியை அதிகரிப்பதிலும் எதிர்ப்புகள் உள்ளன. அரச கட்டமைப்பை வலுப்படுத்த வரி வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகும். 93 மில்லியன் அரச ஊழியர்களுக்கு தற்போது அவசியமாகும்.
  • அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக அடுத்த ஆண்டுக்கு 283 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாய் (விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்) அதிகரிக்க முன்மொழிவு.
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல மாறாக எதிர்காலத்துக்கான திட்டம்.
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்கான நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் தவணை முறையில் வசூலிக்கப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.
  • ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது.
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
  • ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்கைக்கு எதிரானது.
  • பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மீண்டுள்ளது. கடின உழைப்புக்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டனர்.
  • நாட்டின் நலனுக்காக அனைவரும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
  • பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு வெற்றிகரமாகக் குறைத்தமையே நாட்டின் மீட்சிக்குக் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...