‘COP 28’ மாநாட்டில் கலந்துகொள்ள டுபாய் செல்கிறார் ஜனாதிபதி!

Date:

Cop28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.

நாளை வியாழக்கிழமை (30) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று யோசனைகளை முன்வைக்க உள்ளார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதே இலங்கையின் பிரதான முன்மொழிவாகும்.

வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் சிரமப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் இலங்கையிலிருந்து 20 இளைஞர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...