அதிக மழையால் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

Date:

நாளாந்த மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது 76விகிதத்துக்கும் அதிகமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப அனல் மின் உற்பத்தி குறைந்துள்ளதுடன், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நாடு முழுவதும் வறண்ட காலநிலையுடன் காணப்பட்டது. இதனால், தேசிய மின்சக்தி அமைப்பு அனல் மின்சாரத்தை அதிகம் சார்ந்திருந்தது.

இதன் விளைவாக, மின்சார உற்பத்திக்காக நிலக்கரி மற்றும் எரிபொருளுக்கு திரும்ப வேண்டியிருந்தது. மின்சார உற்பத்தி செலவும் அதிகமாக இருந்தது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் பெய்த கனமழையால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில், நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...