இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை பதவி நீக்க விசேட கட்சித் தலைவர் கூட்டம்!

Date:

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் கோரியதையடுத்து, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான அமர்வுகளை இடைநிறுத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தீர்மானித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்த விசேட அறிக்கையை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முன்மொழிந்தார்.

அதன் பிரகாரம் விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...