இலங்கைக்கு வருகைத்தந்த நக்ஷ்பந்தியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவருக்கு கௌரவம்!

Date:

நக்ஷ்பந்தியா தரீக்கா சூஃபி வழியின் உலக ஆன்மீகத் தலைவர், அதிசங்கைக்குரிய மௌலானா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க்ஹ் மெஹ்மத் ஆதில் றப்பானி, நக்ஷ்பந்தியா தரீக்காவின் 41வது உலக ஆன்மீகத் தலைவர் நேற்றைய தினம் (01) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி ஆன்மீகத் தலைவர் மௌலானா ஷெய்க்ஹ் மெஹ்மத் ரப்பானி அவர்களை  கொழும்பு 07, நக்ஷபந்தியா தரீக்கா தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நக்ஷபந்தியா தரீக்காவின் சர்வதேச பல முரீதீன்கள் மற்றும் இலங்கை நக்ஷபந்தியா தரீக்காவின் பிரதம கலீfபா அல்-ஹாஜ் இஸ்ஸத் நிலார் நக்ஷபந்தி, நக்ஷபந்தியா தரீக்காவின் சிரேஷ்ட முரீதீன்களான அல்-ஹாஜ் டாக்டர்  ஹுஸ்னி காதர், அல்-ஹாஜ் ஹனீஃப் யூசுஃப், அல்-ஹஜ் ஸப்ரி கெளஸ், அல்-ஹாஜ் பேராசிரியர் இன்திகாப் ஸுபர், அல்-ஹாஜ் இம்தியாஸ், அல்-ஹாஜ் ஸெய்யித் ருக்னுதீன் மற்றும் பல நக்ஷபந்தியா தரீக்கா முரீதீன்கள் மற்றும் முஹம்மதியா TV நிர்வாகி அல்-ஹாஜ் நபீல் நெளஷாத் உட்பட முஹிப்பீன்கள் பலரும் இந்த நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...