இஸ்ரேலிலுள்ள தனது தூதுவரை வெளியேற்றியது ஜோர்டான்!

Date:

காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி வரும் ஜோர்டான், இஸ்ரேலிலுள்ள தனது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரை நிறுத்தி “அது ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடியை” முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தூதுவர் டெல் அவிவ் திரும்புவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியேறிய ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதுவர் அதே நிபந்தனைகளின் பேரில் மட்டுமே திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா மீதான தாக்குதல்களால் பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் காசா மீதான அளவில்லாத தாக்குதலாலும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...