இஸ்ரேல்- ஹமாஸ் போரில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கை பிரஜையின் உடல் கொண்டுவரப்பட்டது

Date:

இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடல்  இன்று  அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேலிலிருந்து டுபாய் வழியாக, டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.37ற்கு நாட்டிற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

பூதவுடலை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர், விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.

அத்துடன், இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள், வென்னப்புவ பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...