கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு சங்காவும், மஹேலவுமே காரணம்: அர்ஜுன

Date:

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு கிரிக்கெட் நிர்வாக சபையே காரணம் என இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பணிகள் இந்திய ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்ற வகையில் நடைபெறுவதாக அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதுடன், சாகல ரத்நாயக்கவின் ஊடாக கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஜனாதிபதி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களான சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவுமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் விரும்பும் அணியுடன் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப அதிகாரம் வழங்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் எமது கிரிக்கெட்டை கட்டியெழுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட்டைக் கட்டியெழுப்ப விரும்புவதாகவும், ஆனால் கிரிக்கெட் நிர்வாகக் குழு அதற்கு அனுமதிக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...