தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நால்வர் கைது

Date:

இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பில் அரசாங்க மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, மருத்துவ வழங்கல் துறை அதிகாரிகள் குழு ஒன்று நிறுவனத்தை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்கனவே பொலிஸ் காவலில் உள்ள நிலையில், சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அரசியல் அதிகாரம் உள்ள ஒருவர் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு பெயர் சூட்டப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் பதவிக்காலம் கடந்த 18ஆம் திகதியுடன் முடிவடைந்தது. மேலும் அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...