நாட்டில் வருடாந்தம் 5000 குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் பதிவாகின்றன

Date:

வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவாகி வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பல குற்றங்கள் போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியதன் விளைவு என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 5000 சிறுவர்கள் தொடர்பான குற்றச் செயல்கள் பதிவாவதாக தரவுகள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்கள் தொடர்பான குற்றங்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கும் போதைப்பொருள் முக்கிய காரணியாக இருப்பதாக அவர் தெரிவித்ததோடு, கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை குறைக்க முயற்சித்த போதிலும், மொபைல் போன்களின் அதிக பயன்பாடு காரணமாக எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க வேண்டுமாயின் பெற்றோர்கள் வீட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்,” என்றார்.

அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேல் மாகாணத்தை கருத்தில் கொண்டு, மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறுவர் தொடர்பான குற்றங்கள் அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும் என்றார்.

இலங்கையில் சிறுவர் தொடர்பான குற்றங்களுக்கு மற்றொரு முக்கிய காரணியாக போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...