பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவி

Date:

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு சுமார் 58000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவி எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, அவற்றில் இந்நாட்டுக்கு அத்தியாவசியமான 54 வகையான மருந்துகள் குறிப்பாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக மருந்துகள் உள்ளதாக இலங்கை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

மருத்துவ உதவித் தொகைக்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவிப் பங்கும் எதிர்காலத்தில் பெறப்பட உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்து இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...