ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் தெரிவிப்பு

Date:

ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,

அமைச்சரவை ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என்றும், அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவது அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம், அல்லது அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதியில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். இது கடந்த காலத்தில் நடந்ததால், அதையே செய்யலாம் என நினைக்கும் சிலர் இங்கு உள்ளனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது நடைபெறாது” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...