ஸ்டோபெரி ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

ஏற்றுமதிக்காக நாட்டில் ஸ்டோபெரி பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஏற்றுமதிக்காக ஸ்டோபெரிகளை பயிரிடுவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் முன்னதாக கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திட்டத்திற்கு முதற்கட்ட நடவடிக்கையாக நுவரெலியாவில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஒரு ஹெக்டயர் காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியடைந்தால் ஸ்டோபெரி பயிர்ச்செய்கைக்காக 10 ஹெக்டயர் வரையான காணியை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்டோபெரி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 57 ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோபெரிகளை பயிரிட்டால் ஒரு ஹெக்டயர் காணியில் இருந்து வருடத்துக்கு ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 600 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...