ஸ்டோபெரி ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

ஏற்றுமதிக்காக நாட்டில் ஸ்டோபெரி பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஏற்றுமதிக்காக ஸ்டோபெரிகளை பயிரிடுவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் முன்னதாக கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திட்டத்திற்கு முதற்கட்ட நடவடிக்கையாக நுவரெலியாவில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஒரு ஹெக்டயர் காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியடைந்தால் ஸ்டோபெரி பயிர்ச்செய்கைக்காக 10 ஹெக்டயர் வரையான காணியை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்டோபெரி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 57 ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோபெரிகளை பயிரிட்டால் ஒரு ஹெக்டயர் காணியில் இருந்து வருடத்துக்கு ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 600 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...