ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு விசேட வரவேற்பு!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த 19ஆம் திகதி  ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் விஷேட வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள சம்மேளனத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தேசிய தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்பதுல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலாபூசணம் மௌலவி நாகூர் றஹீம், சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஸியாட் ஹமீத் உட்பட இந்நிகழ்வில் சம்மேளனத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஞாபகார்த்தமாக கலாநிதி ஹஸன் மௌலானாவினால் மரக்கன்று ஒன்றும் சம்மேளன தலைமையகத்தில் நாட்டப்பட்டதுடன், சம்மேளனத்தின் தேசிய தலைவர் அப்துல் ஐப்பார் மெளலவியின் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றன.

கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...