அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு!

Date:

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவையொட்டி அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அதேநேரம் குவைத்தூதரகம் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) மூன்று நாட்களுக்கு அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை வரை திறந்திருக்கும்.

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86 ஆவது வயதில் காலமானார்.

குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...