ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

Date:

அம்பாறை – சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா நேற்று(07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன், 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் உயிரிழப்பையடுத்து, பொதுமக்கள் மத்ரஸாவை சுற்றிவளைத்தனர்.

இதனால் மத்ரஸாவின் நிர்வாகியை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவர் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, ஜனாஸா பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...