இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

Date:

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.

இவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது இராணுவ சேவையின் போது படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2021 ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி  மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....