காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!

Date:

ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் “நோய், அழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றால் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று கூறி, ஐ.நா தலைவர் மீண்டும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலியாகியுள்ளதாகவும், 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7 முதல், காஸாவில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இறப்பு எண்ணிக்கை சுமார் 1,200 ஆகும்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...