காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!

Date:

ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் “நோய், அழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றால் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று கூறி, ஐ.நா தலைவர் மீண்டும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலியாகியுள்ளதாகவும், 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7 முதல், காஸாவில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இறப்பு எண்ணிக்கை சுமார் 1,200 ஆகும்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...