க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியீடு!

Date:

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்பட உள்ளன.

இதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை பரீட்­சைகள் திணைக்களத்தினால் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.3,568 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்தப்பட்டது.இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...