சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்!

Date:

2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி  அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை நான்காம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கம்பஹா ஹோலி கிராஸ் கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு மாணவருமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களுக்கும் ‘A’ சித்தி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...