தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள்!

Date:

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தின் 22 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்கள் தங்கப்பதக்கங்களை பெற்று சாதித்துள்ளனர்.

இந்த தேசிய மட்ட போட்டிகள் கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் (26) நடைபெற்றது.

தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் WASHI SHOTOKAN KARATE DO சங்கத்தின் புத்தளம் கிளையின் மாணவர்களாகிய ஏ.எம்.அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவிலும் குமித்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இவர்களை WSKA சங்கத்தின் பிரதான போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பெரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

 

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...