பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் பிரியாவிடை!

Date:

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமை புரிந்து தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்றினை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று முன்தினம் (19) இந்நிகழ்வு நடைபெற்றது.

சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கான ஞாபகார்த்தச் சின்னத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸுடன், பொதுச் செயலாளர் எம் அஜ்வதீன், முன்னாள் தலைவர்களான லுக்மான் ஷஹாப்தீன், பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என் எம் ஷஹீட், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அரை நூற்றாண்டாக இலங்கையில் இயங்கி வரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் பல்வேறு தரப்புகளுடனும் இராஜதந்திர உறவுகளை பலகாலமாக மேம்படுத்தி வருகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...