முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

Date:

2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை முட்டை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

சந்தையில் அசாதாரணமான முறையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ கூறினார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...