வட் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை 60 வீதம் வரை உயரும் சாத்தியம்

Date:

அரசாங்கம் வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் விலையும் 50 முதல் 60 வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவர் டானியா அபேசுந்தர மேலும் கூறியதாவது,

‘‘அரசாங்கம் வணிகர்களிடம் வரியை வசூலிக்க முறையான திட்டங்களை வகுக்க வேண்டும். வணிகர்களை ஊக்குவிப்பதன் ஊடாகவே நிலையான வரி வருமானத்தை வசூலிப்பதற்கான முறைமைகளை உருவாக்க முடியும்.

கடுமையான நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் வணிகர்களுக்கு வரி விதிக்க முயற்சித்தால், அவர்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவை வழங்க முடியும்.

வற் வரி அதிகரிப்பால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்வோருக்கு போட்டி விலையில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.‘‘ என்றார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...