இரண்டாவது தவணைக் கடன் தொடர்பில் இன்று தீர்மானம்!

Date:

இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முதலாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று கூடவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நிதியத்தின் நிர்வாகக்குழுவின் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, செயல்திறன் அளவுகோல்களை கடைபிடிப்பதில் இருந்து விலக்குகள் மற்றும் மாற்றங்கள், நிதிநிலை அறிக்கைகளின் மதிப்பாய்வு, திருத்தம் மற்றும் அணுகல் ஆகியவை பரிசீலிக்கப்படவுள்ளது.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க கடனுதவி முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிப்பது குறித்து இன்றைய தினம் செயற்குழு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் கடன் வழங்குநர்கள் ஒன்றுகூடி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...