இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிய நாடுகளில் சவூதி அரேபியா முதல் இடம்

Date:

2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில், 63,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும், 200,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய இலங்கையை விட்டு வெளியேறுகிறார்கள்.

கடந்த ஆண்டு முதல் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமாக அவை உள்ளன.

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அம்சா, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டில் 7 பில்லியன் டொலர்களுக்கு மேல் பணம் அந்நிய செலாவணியாக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் கணிசமான பகுதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வெளிநாட்டவர்களால் பங்களிக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சவூதி அரேபியா , இலங்கையர்களுக்கு 63,000 வேலை வாய்ப்புகளை (வாய்ப்புகளை) உருவாக்கி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 7-8 பில்லியன் டொலர்கள் வரையிலான வருடாந்திர பணம் அனுப்பும் தொகையில், கணிசமான பகுதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மொத்த பணம் அனுப்புவதில் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...